அம்மையப்பன் நகர் அருகே ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் ஆலயத்தில் புத்தாண்டு முன்னிட்டு ரூபாய் 5 லட்சம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம்
ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆலயத்தில் 2024 ம் ஆண்டு புதிய ஆண்டு முன்னிட்டு புத்தாண்டு விழா சிறப்பு அலங்காரம் நடைபெற்றது

கோவில் ஆலயத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான புதிய கரன்சி 500, 200, 100, 50, 20, புதிய நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

மேலும் புத்தாண்டு முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது மேலும் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரத்தை காண ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி. குமரேசன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *