பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் 21-ஆம் ஆண்டு
ஸ்ரீராதாகிருஷ்ண திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி..
ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள வடக்குமட வளாகத்தில் 21-ஆம் ஆண்டு ஸ்ரீராதாகிருஷ்ண திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
பூர்வாங்கம், விக்னேஸ்வர பூஜை, அஷ்டபதி பஜனை உடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நாதஸ்வர குழுவினரின் நாதசங்கமம், திவ்ய நாம பஜனை மற்றும் போலோத்ஸவம், பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் சம்ப்ரதாய உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சியை தொடர்ந்து ஸ்ரீ ராதாகிருஷ்ணனின் 21-ஆம் ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஆஞ்சநேய உத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக மெலட்டூர் பாகவத மேளா குழுவினரின் நரசிம்ம அவதாரம் எனும் பிரகலாத சரித்திரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீ ராதாகிருஷ்ணனின் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ஆடிட்டர் ஹரிகரன் குடும்பத்தினர் செய்திருந்தினர்.