வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே பிறந்த தின விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தலைமை ஆசிரியை, ஆசிரிய -ஆசிரியைகள், மாணவிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கினர்.

இந்தியாவின் முதல் என்

ஆசிரியர்சாவித்திரிபுலே

அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளை தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்கு கிளம்புவாள். ஏனெனில், அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும், சேற்றையும், மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள்.

அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக் கொள்வாள். அவள் செய்த குற்றம் தான் என்ன? கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள், விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்கு புதுப்பாதை காட்டினாள்.

அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப்பிடித்தால். அவளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே. மராட்டிய மாநிலத்தில் 1831 -ஆம் ஆண்டு பிறந்த சாவித்திரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவியானார்.

அவர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ். பாரார் கல்வி நிலையத்திலும் பிறகு புனேவில் உள்ள மிஸ் மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்திரியை படிக்க வைத்தனர். 1848 ஆம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கான முதல் பள்ளியை உருவாக்கினர்.

அவர்களுக்கென 1863- ஆம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர். கல்விப் பணிவோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.

சிறுவயதில் கணவனை இழந்த பெண்களுக்கும், சிறுவயதிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக உள்ளம் ஒன்றை தொடங்கினர்.

பெண் குழந்தைகளை சிசுக்கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தை திருமணத்தை எதிர்த்தனர். ஜாதியின் பெயர் சொல்லி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்வி அளித்தனர்.

விதவை மறுமணம், சாதி கலப்பு திருமணம் என அனைத்து சமுதாய சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர். இந்தப் புனித செயலுக்கு அவர்களுக்கு கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது.

அவர்கள் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசை சொற்களை வீசினர். எங்கும் கல்விக்கு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்திரி புன்னகையை மட்டும் தந்தார். ‘கல்வி என்னும் புனிதத்தை உலகுக்கு வழங்கும் எனக்கு இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன’ என்றார்.

தொடர்ந்து சமுதாயப் பணியாற்றினார் சாவித்திரி புலே. “கல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் விரலைப் பெற வேண்டும். அது மெய்யும் பொய்யும் உணர வைக்க வேண்டும்” என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்கு பரிந்துரைத்தார்.

திருமணங்களின் போது பெண்ணை படிக்க வைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதி மொழி எடுக்க வைத்தார். அவர் எழுதிய நூல்களும், கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 1897 இல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தார்.

மார்ச்- 10, 1897 -ம் ஆண்டு பிரியா விடை பெற்றார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதிச்சடங்கை தானே செய்யும் கம்பீரத்தை பெற்றவர். ஒரு சமுதாயத்தின் பிழையை திருப்பும் போராளியான இவர், வாள் இல்லாத வீராங்கனை. ஆசிரியராக பலரது தலையெழுத்தை மாற்றியவர்.

குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் இத்தகைய திடப் பேராண்மை கொண்ட ஆசானை வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை. பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை; அற்புதமே பெண் உருவானது. இவ்வாறு அவரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *