ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆணைக்கிணங்க திருவாரூர் விசிக கட்சியினர் ஒன்றிணைந்து மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைமையிலான
ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி ஏற்பட்ட மழை வெள்ளபாதிப்பை தீவிர பேரிடராக அறிவிப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எதிர்வரும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குசீட்டு முறையை நடைமுறை படுத்த வேண்டும் மேலும் மின்னணு வாக்குப்பதிவு முறையை உடனடியாக ரத்து செய்யவேண்டும் பாராளுமன்றத்தில் புகை கொண்டு வீசியதை கேள்விஎழுப்பிய 146 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த ஒன்றிய பாஜக தலைமையிலான பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்
ஆர்ப்பாட்டத்தில் விசிக திருவாரூர் மைய மாவட்டசெயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் வடக்குமாவட்ட செயலாளர் தமிழ்ஓவியா மாவட்டசெயலாளர் வெற்றி தலைமையில் நடைபெற்றது ஒருங்கிணைப்பாளர் என்டி.இடிமுரசு முன்னிலை வகித்தனர் விசிக மேலிடபொறுப்பாளர் வழக்கறிஞர் வேலு .குணவேந்தன் கண்டன உரையாற்றினார்
நிகழ்வில் திருவாரூர் விசிக முன்னாள் மாவட்டசெயலாளர்கள் மா.வடிவழகன் வழக்கறிஞர் வி.த.செல்வம் துணைச் செயலாளர் கோவி.கணேசன் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக எஸ்டிபிஐ மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்