வலங்கைமானில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான முன்னுரிமை தொடர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கோபாலசுந்தரம் தலைமை வகித்தார், மாவட்ட துணைத் தலைவர் பா அந்தோணி பாஸ்கர், வட்டார செயலாளர் மு சரவணன், வட்டார பொருளாளர் மோ. ராஜாராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அ. விஜய் பூபாலன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை என்ற அடிப்படையில் புதிதாக வெளியிட்டுள்ள அரசாணை 243 ஐ திரும்பப் பெற்று, பதிவு உயர்வு மற்றும் பணி மாறுதல் ஆகியவற்றிற்கு பழைய நடைமுறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமை இருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி துறையில் இரண்டு ஆண்டு காலமாக பதிவு உயர்வு வழங்காமல் தகுதி தேர்வை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வினை உடனடியாக பழைய நடைமுறையிலேயே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு, அகவிலை படி உயர்வு நிலுவைத் தொகை, உயர்கல்வி படித்தவர்களுக்கு பின்னேற்பு அனுமதி, உயர்கல்வி படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். இந்த பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.