காட்டு பன்றிக்கு வைத்த மின்சாரம்
விவசாயி உடல் மீது பாய்ந்து பலி.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் அய்யாநல்லூர் சிதம்பரம் மகன் ரெத்தினகுமார் (வயது 48). விவசாயி. இவரது
வயலில் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 50) விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வயலுக்கு காட்டு பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்ததால் இதை தடுக்கும் பொருட்டு மோட்டர் கொட்டகையிலிருந்து விஜயகுமார் மின்கம்பியை வயலை சுற்றி வைத்துள்ளார்.
இந்த நிலையில் பணங்குடம் உடையார் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல் மகன் தேவேந்திரன் (வயது 55) என்பவர் நேற்று அதிகாலை தனது வயலுக்கு சென்ற போது காட்டு பன்றிக்காக வைக்கபட்ட மின்சாரம் தேவந்திரன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சோழாபுரம் போலீசில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.