செங்கோட்டை நூலகத்தில் தேசிய திறனாய்வு (என்எம்எம்எஸ் தேர்விற்கு இலவச மாதிரி தேர்வு;-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை உதவியுடன் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 125 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். தேர்வை இலத்தூர் அரசுப்பள்ளி ஆசிரியை அமுதா நடத்திக் கொடுத்தார்கள்.

முதல் ஐந்து இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பாக பரிசு வழங்கப்பட்டது.
இதில் தென்காசி மாவட்ட நூலக ஆய்வாளர் . சண்முகசுந்தரம் மற்றும் அய்யாபுரம் நூலகர் பாலசுப்பிரமணியன், செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ்,நிர்வாகி அபுஅண்ணாவி,
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *