துத்தி குளத்தில் உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு. மாபெரும் கபடி போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, துத்தி குளத்தில் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு.

துத்திகுளம் அம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாபெரும் கபடி போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பிரதிநிதி பழனிசாமி தலைமை தாங்கினார் கிளைக் கழகச் செயலாளர்கள் செல்லதுரை, மனுவேல்ராஜ், ஆகியோர் முன்னிலை வைத்தனர்

தென்காசி முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் வழகறிஞர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இறுதிப் போட்டியினை தொடங்கி வைத்து பரிசுகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் ஆலங்குளம் காவல்துறை ஆய்வாளர் சாகுல் ஹமீது, ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்க செல்வம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி மகேந்திரன், மகேஸ்வரி சத்தியராஜ் , சங்கர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜதுரை, சுந்தர், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பொன்மோகன், ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த் திலக், கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், ஆலங்குளம் சோனா மகேஷ் , ஓட்டுநர் அணி பூதத்தான் ஏபிஎன் குணா, ராஜபாண்டியன் இளைஞரணி நவீன் ஆட்டோ ஜோசப் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் அம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி மணிகண்டன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *