கனமழையால் உளுந்து ,பயிர் ,வேர்கடலை பாதிப்பு விவசாயிகள் கவலை…

நீடாமங்கலம் அருகே இரண்டு நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து ,பயிர் ,வேர்கடலை பாதிப்பு விவசாயிகள் மனவேதனை அடைந்தனர்.

சென்னை , திருவள்ளுர் , காஞ்சிபுரம் , நாகை திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடை மடை மாவட்டமான திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் மிகுந்த இந்த பகுதியில் விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன்குடிக்காடு, சோனாப்பேட்டை , காளாச்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சுமார் 300 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பணப்பயிர்களான உளுந்து , பச்சை பயிர் , வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் பருவம் தவரி பெய்யும் மழையால் இந்த பயிர்கள் இரண்டு நாட்கள் மழை நீரீல் இருந்தால் பயிர்கள் அழுகி வீணாகிவிடும் எனவே அரசு வேளாண் துறை அதிகாரிகள் முறையாக பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க எற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *