பாபநாசம் அருகே
அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சீர்வரிசை எடுத்து வந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா..

மழையையும் பொருட்படுத்தாமல் கும்மி அடித்து, குலவி சத்தமிட்டு பொங்கலை கொண்டாடிய ஆசிரியர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அன்னப்பன்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் அன்னப்பன் பேட்டை அண்ணா சிலையிலிருந்து கிராமங்களின் முக்கிய வீதிகளின் வழியாக பொங்கல் சீர்வரிசை எடுத்து வந்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து மாணவ-மாணவிகள் மத்தியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *