பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே அன்னப்பன் பேட்டையில் எந்நேரமும் டிரான்ஸ்பார் சாய்ந்து விழும் நிலையில் காணப்படும், மும்முனை மின்சாரம் செல்லும் கம்பங்கள்..
விபத்து ஏற்படும் முன்பு சரி செய்யப்படுமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொதுமக்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே அன்னப்பண்பேட்டை களக்கோடி செல்லும் சாலையின் இடையே கொத்தங்குடி பகுதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்ட மும்முனை கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் உடன் சேர்ந்து எந்த நேரமும் வயல்வெளிகளில் சாய்ந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது.
இந்த மும்முனை மின்சார கம்பத்தை கடந்து, ஏராளமான இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
மேலும் அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவர்களும் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்ட மும்முனை மின்சாரம் செல்லும் அந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்பது அந்தப் பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.