பாபநாசத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு
பொங்கல் பரிசுத்தொகுப்பு பேரூராட்சித் தலைவர் வழங்கினார் …

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழக அரசு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இவற்றுடன் வேட்டி சேலை வழங்கப்படுகிறது.

அதன்படி தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம், திருப்பாலைத்துறை, அரையபுரம் ஆகிய கூட்டுறவு அங்காடிகளில் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள்
கோவி.அய்யாராசு , துரைமுருகன்,பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் நகரச் செயலாளர் கபிலன், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூபாய் 1000 ரொக்க பணம் ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்துமேரி மைக்கேல் ராஜ், ஜாபர் அலி, சமீரா பர்வீன், பாலகிருஷ்ணன், பிரகாஷ் , வங்கி செயலாளர் சரவணன், அங்காடி விற்பனையாளர் சிவகாம சுந்தரி மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய நகர சார்ப்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *