பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசத்தில் பொங்கல் விழா கோலப் போட்டி ….
பாபநாசம் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் , கும்பகோணம் தங்கமயில் ஜுவல்லரி பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்தும் பொங்கல் விழா கோலப்போட்டி பாபநாசம் வடக்கு வீதியில் நடைபெற்றது .
அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லைநாயகிசம்பந்தம் தலைமை வகித்து பொங்கல் விழா கோலப் போட்டியினை தொடங்கி வைத்தார்.
விழாவில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முஹம்மது , கும்பகோணம் தங்கமயில் கிளை மேலாளர் சிவசுப்பிரமணியன், உதவி மேலாளர் பாலமுருகன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், கீர்த்தி வாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கோலப் போட்டியில் கலந்து கொண்ட 61 பேர்களுக்கு கும்பகோணம் தங்கமயில் ஜுவல்லரி சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழாவில் அன்னை சாரதா மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் விமலா, கல்பனா, உமா, வசந்தி, திலகவதி, மாஸ்டர் சர்வேஸ்வரன் , லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர்கள் சம்பந்தம், பிரபாகரன், கணேசன், பழனியப்பன், ஜோதி, பாண்டியன் ஆனந்த் காந்தி , பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் லயன்ஸ் கிளப் செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.