வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பயிற்சிபயிலும் மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்கும் விழா தொடங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எதிர்வரும் பள்ளி இறுதி ஆண்டு தேர்வு மற்றும் ஜே.இ. இ. தேர்வு எழுத இருக்கும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு வகுப்புகள் நடைபெறுகிறது,
இதில் பயிலும்மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டியை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் க. செல்வம், பொருளாளர் எஸ்.ஆர். ராஜேஷ் உள்பட நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மு. நாவளவன் மற்றும் ஆசிரியர் -ஆசிரியைகள் தொடங்கி வைத்தனர், இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.