அலங்காநல்லூரில் பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாஜக சார்பில் திமுக அரசு சார்பில் கீழக்கரை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்ட இருப்பதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு ஸ்ரீ முனியாண்டி சுவாமி பெயர் அல்லது ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் பெயரை சூட்ட வேண்டும் அதுவும் இல்லை என்றால் அன்னை மதுரை மீனாட்சி பெயராவது சூட்ட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் மத்திய மோடி அரசின் செயல் திட்டங்களால் மக்கள் பல்வேறு பயனடைந்துள்ளனர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் மக்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் தங்கதுரை மற்றும் தெற்கு ஒன்றிய தலைவர் இருளப்பன், தலைமை தாங்கினார் சோழவந்தான் தொகுதி அமைப்பாளரும் மாவட்டத் துணைத் தலைவருமான கோவிந்தமூர்த்தி, மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் சீதாராமன், முன்னிலையிலும் நடைபெற்றது. பிரச்சாரம் மாநில செயலாளர் புதூர்ராஜா, மாநில செயற்குழு பழனிவேல்சாமி, மீனவர் பிரிவு மாநில துணை தலைவர் சண்முகானந்தம், மாவட்டச் செயலாளர் ரவிசங்கர், சித்ராதேவி, ஜெயபாண்டி, சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர்கணேஷ், சந்திரபோஸ், ஓபிசி மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார், செல்லப்பாண்டி, ராஜா, கணேசன், முனீஸ்வரி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் சித்ரா, பட்டியல் அணி பொதுச் செயலாளர் சோனைமுத்து, மற்றும் நிர்வாகிகள் மாணிக்கம், குமரேசன், கண்ணன், ராஜாமணி, துரைசெல்வம், மயில், கண்ணாராஜேஷ், சாந்தகுமாரி, அமராவதி, மகாலட்சுமி, முனீஸ்வரன் பெருமாள், சாமிகஜேந்திரன், கண்ணன், வசந்தி கார்த்தி, செந்தாமரை, சுப்பிரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..