குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக் கான பயிற்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்த கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண் அறிவு கற்பிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வளாகங்களில் 26 ஆயிரத்து 349 எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 26 ஆயிரத்து 385 தன்னார்வலர்கள் எழுத்தறிவு கல்வியை கற்பிற்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி கூட்டம் குடவாசல் ஒன்றியத்தில் தொடங்கியது.

வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை வகித்தார், வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்,

பயிற்சியின் நோக்கங்களை விளக்கி ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர் மணிகண்டன், காத்த முத்து பேசினார். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனிவேல் விரிவாக எடுத்துரைத்தார்.

இதில் 38 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம் செயல்படுத்த எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் மேற்பார்வையாளர் பூபாலன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *