பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே குடிசை வீடுகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் கீற்றுப் பின்னும் தொழிலாளர்கள்..
நிலையை அறிந்து தமிழக அரசு ஆதரவு தர வேண்டுமென கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர் மற்றும் ஒன்பத்துவேலி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மட்டையை கொண்டு கீற்று பின்னும் தொழிலில் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னந்தோப்பில் இருந்து தென்னை மட்டைகளை விலைக்கு வாங்கி அதை தண்ணீரில் ஊற வைத்து பக்குவப்படுத்தி அடுக்குகளாக கட்டி வைக்கும் பட்சத்தில், குடிசை வீட்டில் வாழ்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தென்னங்கீற்றுகளை வந்து வாங்கி செல்வதாகவும், வாங்க வருபவர்களும் அதிகபட்சமாக ஏழை எளியவர்களாக இருப்பதால் குறைந்த விலைக்கே கீற்றை விற்பனை செய்வ வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும், மழைக்காலங்களில் மழையில் நனைந்து மடிந்து போய்விடுவதாகவும், வேறு தொழிலுக்கு செல்ல முடியாததால் கீற்று பின்னும் தொழிலை தொடர்ந்து செய்து வருவதாகவும், குடிசை வீடுகளை நம்பியே பிழைப்பு நடத்தி வரும் கீற்றுப் பின்னும் தொழிலாளர்ளின் நிலையை அறிந்து தமிழக அரசு ஆதரவு தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.