எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி.
சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா சிலம்பாட்டம்,சுருள் வால், ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ் இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சில மக்களை பயிற்றுவித்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை இலவசமாக பயிற்றுவித்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை இன்று கொண்டாடினர். சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை,புத்தூர்,கொள்ளிடம்,பாதரக்குடி,முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 200 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள்,பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.காலை பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, சுருள்வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழங்கி பாராட்டினர். இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.