சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் நகர் மன்ற தலைவர் பங்கேற்பு

சிவகங்கையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடிய நகர மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் நகர் மன்ற தலைவர் குடும்பத்துடன் பங்கேற்றார் இந்த சமத்து பொங்கல் விழாவில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

நகராட்சி பணியாளர்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் சிறப்பாக கோலமிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் பரிசுகளை வழங்கினார்.
இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *