விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கொண்டாடினர்.

இதில் கண்டமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.எஸ்.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். ஊராட்சி மன்றதலைவி பிரியதர்ஷினி,வட்டார பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் சேகர், சுமதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்றார். . ஒன்றிய குழு பெருந்தலைவர்.

 ஆர்.எஸ்.வாசன்  குத்துவிளக்கேற்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடி துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கி தனது பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள் பொன்னுசாமி மற்றும் ஊழியர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன் ,இல்லம் தேடி கல்வி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு பொறுப்பாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் செய்திருந்தனர்.இறுதியாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழரசி துணைத் தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் நன்றி உரை வழங்கினர். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *