சீர்காழி அருகே பூம்புகாரில் சுற்றுலா துறை சார்பாக பொங்கல் திருவிழா மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலா தளம் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க இவ் ஊரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கலைக்கூடம் மற்றும் சங்கு வீடுகள் பூங்காக்கள் என தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கியது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது பூம்புகார் சுற்றுலா தளம் பராமரிப்பு இன்றி சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் திமுக ஆட்சியின் பூம்புகார் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமான பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் பூம்புகார் சுற்றுலா துறை சார்பாக புதுக்கோட்டை நாட்டுப்புற கலைஞர்களின் கரகாட்டம் காவடி ஆட்டம் சிறுவனின் கருப்பு சாமி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் பண்பாடு கலாச்சார நடன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன மற்றும் பொங்கல் செய்து கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் இட்டு விழாவை சிறப்பித்தனர் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் செயற்குழு உறுப்பினர் ஜி .என். ரவி மாவட்ட ஒன்றிய குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *