எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி.
சீர்காழி சுற்றுவட்டார பகுதி விளைநிலங்களில் 7 நாட்களாக தேங்கியுள்ள மழை நீர்.எஞ்சிய பயர்களை காப்பாற் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக 10,000 ஏக்கர் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் மழைநீரில் சாய்ந்து மூழ்கி பாதிக்கப்பட்டது.
24 மணி நேரத்தில் 30 செ.மீ அளவிற்கு மழை பொழிந்ததால் விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.கடந்த 7 நாட்களாக மழை நீர் வடியாத நிலையில் நீரில் சாய்ந்து மூழ்கிய பயிர்கள் முளைக்க துவங்கியதால் விவசாயிகள் செய்வதறியது திகைத்து வருகின்றனர்.
இதனால்கவலை அடைந்த விவசாயிகள் விளை நிலங்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை துவங்கியுள்ளனர்.தற்போது 10 முதல் 15 தினங்களுக்குள் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீரென பெய்த கன மழை காரணமாக சம்பா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கியது.7 நாட்கள் கடந்தும் விளை நிலங்ஙஙளில் தேங்கிய மழைநீர் வடியாத நிலையில் முற்றிய நெல் மணிகள் முளைக்க துவக்கியது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் எஞ்சிய சம்பா பயிர்களையாவது காப்பாற்ற வேண்டுமென சீர்காழி சுற்றுவட்டார பகுதியான அரசாளமங்கலம் ஜீவா நகர் பச்சை பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விளைநிலங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே அரசு உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.