பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே இலுப்பைக்கோரையில் ஆட்டம் பாட்டத்துடன் கும்மி அடித்து பொங்கல் விழா கொண்டாடிய திருநங்கைகள் ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பைக்கோரையில் திருநங்கைகள் ஒன்றிணைந்து தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படும் தைத்திருநாளை சொந்த வீடுகளில் கொண்டாட முடியாத நிலையில் தெருவில் திருநங்கைகள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து படையில் வைத்து பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு குலவி சத்தமிட்டு ஆட்டம் பாட்டத்துடன் கும்மியடித்து பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
மேலும் திருநங்கைகள் தங்கள் வலி வேதனைகளை பாடலாக பாடினர் பொங்கல் விழாவில் பாபநாசம் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் சுபஸ்ரீ, வர்ஷினி, தேவயாணி, செம்பருத்தி, திரிஷா, பூமிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.