தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிசந்திரன் உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா அறிவுரையின்படி சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வீர சிறுவர்கள் தினம்
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் அனுசரிக்கப்பட்டது.

கல்லூரியின் மகளிர் பயில்வுகள் மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் மகளிர் பயில்வுகள் மைய ஒருங்கிணைப் பாளர் மற்றும் விலங்கியல் துறை இணைபேராசியர் இசக்கியம்மாள் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் ஜெய்நிலாசுந்தரி தலைமை வகித்து பேசினார்.

சகி- ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி வீர சிறுவர்கள் தினம் குறித்த சிறப்பினை விவரித்ததை தொடர்ந்து “வீர் பால் திவாஸ்” உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.

இறுதியில் முனைவர் விஜிலா நேசமணி நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *