தோகை மயில் ! கவிஞர் இரா .இரவி !
மண்ணில் தெரியும் வானவில் !
ஆண்களே அழகு பறை சாற்றும் மயில் !
தோகை விரித்து ஆடினால் பார்க்க
மேகமும் மலையாய் வரும் !
விழி இரண்டு போதாது ஆடும்
வனப்பை ரசிக்க !
வண்ண இறகை
புத்தகத்தின் நடுவே வைத்து
குட்டிப் போடும் என்று
காத்திருக்கும் சிறுவர்கள் !
சொல்லில் அடங்காது
வண்ணத்தின் அழகு !
பார்த்தல் பரவசம் !
கண்டால் கவலைகள்
காணாமல் போகும் !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *