திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டம்
குறைதீர்க்கும் முகாமில்ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!
திருவொற்றியூர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று நடைபெற்று வருகிறதுஒவ்வொரு வட்டமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து 13 வது வட்டத்தில் மாமன்ற கவுன்சிலர் சுசிலா ராஜா தலைமையில் நடைபெற்றது.
அனைத்து அரசு துறையினர் பங்கேற்ற இந்த முகாமுக்கு வருகை தந்த முதியவர் களையும் மாற்றுத்திறனாளிகளையும் ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை காவலரிடம்
கவுன்சிலர் சுசீலா ராஜா நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த முகாமை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு தொடங்கி வைத்தார்
இந்த முகாமில் மாநகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் நவே ந்திரன் ( மண்டல அலுவலர்) உசேன்( செயற் பொறியாளர் ) ஆனந்தராவ் ( உதவி செயற்பொறியாளர் ) பால முரளி ( இளநிலை பொறியாளர் ) மக்கள் உரிமைத் தொகை பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம் மெட்ரோ வாட்டர் தமிழ்நாடு மின்சார வாரியம் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை , ஆதிதிராவிட நலத்துறை , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை போன்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது இந்த முகாமில் மக்கள் 500 க்கு மேற்பட்ட பயனடைந்தனர்.