பெரியகுளத்தில் இரத்ததான முகாம்:

பெரியகுளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கே.எஸ்.கே.கேண்டீன் எதிர்புறத்தில் பெரியகுளம் பிறர் நலன் நாடுவோம் அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடந்தது.

இஸ்லாமிய நலக்கூட்டமைப்பின் தலைவர் ஜனாப் வெற்றி A. முஸ்தபா தலைமை தாங்கினார். இரத்ததான முகாமை பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் பாரதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகி ஆலிம் அகமது முஸ்தபா, இஸ்லாமிய அமைப்பின் கூட்டமைப்பின் செயலாளர் நிஜாத் ரகுமான், பிறர் நலன் நாடுவோம் அறக்கட்டளையின் தலைவர் அகமது பாஷீத் ரகுமான், செயலாளர் ஜஸ்திக் ரகுமான், பொருளாளர் முகமது யாசின் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆருண் ரஷீத், சாதிக்பாட்சா, தோழன் பாவா, சமூக ஆர்வலர் அஜித் பாண்டி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர். இரத்ததான முகாமில் 52 பேர் குருதி கொடுத்தனர்.பின்பு அவர்களுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் அத்தா பிரியாணி கடை சார்பில் ஊட்டச்சத்துணவுகள் வழங்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *