வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு சார்பில் தேசிய கீதம் ஜன கன மன அறிவிக்கப்பட்ட நாள் விழாகொண்டாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசிடியு மாவட்ட தலைமை அலுவலகத்தில் தேசிய கீதம் ஜன கன மன அறிவிக்கப்பட்ட நாளான காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமையில் மாணவிகளால் தேசிய கீதம் பாடப்பெற்று தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,எழுது பொருட்கள் வழங்கினார், முன்னதாக நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் கலியமூர்த்தி, டிசிடியு வலங்கைமான் நகர தலைவர் அகமது மைதீன், கே. என். ஆர். இளங்கோ உள்பட மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *