பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அருள்மிகு தண்டு மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
நரசிம்மபுரம் இராமசாமி கட்டளையில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு தண்டு மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
நரசிம்மபுரம் கிராமத்தின் பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் உதவியுடன் திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மேள, தாளங்கள் முழங்க அருள்மிகு தண்டு மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.