கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் ,லியோ சங்கம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகிய இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் 28-01-2024 நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது

ஸ்ரீசரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழி லென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை கிடைக்க இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, உள் வெளி லென்ஸ், உணவு தங்குமிடம், போக்குவரத்து செலவு அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு முகாம் சங்கத் தலைவர் லயன் எஸ்.கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *