மதுரை ரோஜாவும் முதியோர் இல்லத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொது செயலாளர் சினி வினோத் தலைமையிலும், வழக்கறிஞர் முத்துக்குமார் முன்னிலையிலும் தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்வும், முதியோர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக மதுரை உயர் நீதிமன்றம் காவல் சார்பு ஆய்வாளர் மகாராஜன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார்.

விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, அழகப்பன், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது. முடிவில் முதியோர் இல்ல மேலாளர் ராமன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *