வி. தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி
புதுச்சேரி
ஆசிரியர் ஸ்ரீ விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி வரவேற்று பேசினார். துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை உரையாற்றினார். விளையாட்டுத்துறை துணை இயக்குனர் தேசிய நல்லாசிரியர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
நல்லாசிரியர் முனைவர் மு.வெற்றிவேல் நோக்க உரையாற்றினார். நிர்வாக அதிகாரி பாஸ்கரன், புதுச்சேரி பஞ்சாட்சரம், பாகூர் தன்னார்வலர் வி.என். கணபதி, மேல் பரிக்கல் பட்டு டாக்டர் கீர்த்தனா, ஆங்கில விரிவுரையாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி விரிவுரையாளர் சிவராஜ், நூலகர் முத்தாலு, உடற்கல்வி ஆசிரியர் ரகு, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி சூரிய நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.. விழாவை மேல் பரிக்கல் பட்டு ஸ்ரீ விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவனர் மேஜர் வி முத்துலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முடிவில் நாட்டு நல பணி திட்டம், திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.