அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தி டிக்டோ ஜாக் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம்

           இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை கலைதல் மற்றும் கடந்த 12.10 2023 அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் டிக்டோ ஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக் கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீதம் ஆசிரியர்களின் பணி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்டச் ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார்

தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஈவேரா பாலமுருகன் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார்

கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை வெளியிட வேண்டும் என் பண உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது

இறுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவி முடித்து வைத்து உரையாற்றினார் முன்னதாக வட்டார செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார் இந்த போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *