மதுரையில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு… சைபர் கிரைம் போலீசார் சாதனை
மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சைபர் கிரைம் போலீசார் வாயிலாக, ரூ.17 லட்சத்து 97 ஆயிரத்து 200 மதிப்பிலான 115 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக, சைபர் கிரைம் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட, 2021 முதல் தற் போது வரை, ரூ.1 கோடியே 93 லட்சத்து
4 ஆயிரத்து 800 மதிப்பிலான, 1322 செல் போன்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.