அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
இதில் மதுரை இணை ஆணையர் க. செல்லத்துரை, மாவட்ட சேர்மன் சூரியகலா கலாநிதி, வல்லாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் குமரன், கவுன்சிலர் மலைச்சாமி, வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம்,அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருள்செல்வன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆதரவற்ற முதியோர்கள்,பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இலவச பருத்தி வேட்டி, சேலைகள் திருக்கோயில் நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டன.