திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து

திருவொற்றியூர் பொது விருந்தில் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர், மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டுள்ளார் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோவிலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு தரிசனத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பின்னர் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்த பொது விருந்தில் கலந்து கொண்டனர்

இந்த பொது விருந்தில் வடிவுடையம்மன் கோவில் உதவியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பொது மக்கள் பொது விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் இலவசமாக புடவை வழங்கப்பட்டது இந்த புடவையை சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் வழங்கினர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *