வந்தவாசியில் தை மாத சிறப்பு ஸ்ரீ வைணவ மாநாடு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி வைணவ சபை மற்றும் ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கர்யம் டிரஸ்ட் இணைந்து ஆரணி ரோட்டில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் தை மாத சிறப்பு ஸ்ரீ வைணவ மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் முதலாவதாக ஸ்ரீ கிருஷ்ணா லீலாமிர்த பஜனை மண்டலி சார்பில் ஸ்ரீ கிருஷ்ண கானம் பாடப்பட்டது. தொடர்ந்து திருக்குடந்தை ஸ்ரீமான் உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமிகள் பங்கேற்று ‘ஸ்ரீமந் பாகவத சாரம்’ என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார்.
மேலும் திருமுக்கூடல் ஜெகன் பராங்குச தாசர் அவர்கள் ‘நின்னோடு எழுவரானோம்’ என்ற தலைப்பில் ஆன்மீக சிறப்புரை ஆற்றினார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் ததியாராதனை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.