பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விழா
தஞ்சாவூர் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் முன் மழலையா், தொடக்க நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து இரு நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன் மழலையா் வகுப்பினருக்கான ஆண்டு விழாவில் கும்பகோணம் முன்னாள் ஆயர் அந்தோணிசாமி சிிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார்
பள்ளி முதல்வர் பிரமளா சாந்தா மேரி ஆண்டு விழா அறிக்கை வாசித்தார். வயலூர் ,திருச்சபை பங்குத்தந்தை ஜான் போஸ்கோ, பள்ளி நிர்வாக அதிகாரி காஷ்மீர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆண்டு விழாவில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசியதாவது: “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று அறிவுரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பலவேறு வகையான கலை, நடன, நாடக நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்திருந்தன.
இதில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.