அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு சார்பில் அதன் கோட்டத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் கணேஷ்ராவ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில். தமிழக அரசு சார்பில் செயல்படும் நலவாரியம் பதிவு செய்யும் வலைதள தற்போது இயங்கவில்லை, அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும், 20 வருடம் பணிபுரிந்து ஓய்வுபெறும் அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கு தமிழக அரசு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உங்கள் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *