வலங்கைமானில் நடமாடும் வாகனம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் நடமாடும் வாகனம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி, நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான செயல்முறை விளக்கம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலய பகுதியில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான விழிப்புணர்வு முகாமை தாசில்தார் ரஷ்யா பேகம் துவக்கி வைத்தார்.

இதில் தேர்தல் துணை தாசில்தார் ரவி,வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரர், கிராம நிர்வாக அலுவலர் வடிவேல், கிராம உதவியாளர் சரவணன் உடன் இருந்தனர். இதில் ஏராளமான வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *