திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த மையத்தில் பயிலும் கற்போர்களுக்கு ஸ்லேட், பல்பம், ரூல்டு நோட் புக்ஸ், பென்சில், பேனா ஆகிய கற்றல் பொருட்கள் மைய தன்னார்வல ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது .
இந்த அனைத்து பொருட்களையும் 821 கற்போர்களுக்கு தன்னார்வலர்கள் மையங்களுக்கே நேரில் சென்று வழங்கினர்.
இந்த நிகழ்வில் தெள்ளாறு வட்டார கல்வி அலுவலர் டி. ரங்கநாதன், மேற்பார்வையாளர் டி. ஜெயசீலன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் எம். மரிய பிரகாசம், பாலாஜி, பிரபு, கற்பகவல்லி, ஆகியோர் பங்கேற்று புதிய பாரத திட்ட இயக்க செயல்பாடுகளை விளக்கினர்.