புலியூரில் திமுக தேர்தல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு தென்னை நிறுவனங்களின் நட்பு அமைப்புகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகளின் கூட்டமைப்பை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் இந்தோநேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்து மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து, தமிழ்நாட்டிலேயே விலையும் தேங்காய், நிலக்கடலை மற்றும் எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.
மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தெரிவித்தார்.