விவசாயிகளுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது காங்கிரஸ் கட்சி என திருப்பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழா முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேச்சு!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் 65 அடி அளவில் கொடியேற்றுதல் மற்றும் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி ஆகியோரின் முழு உருவச்சிலை திறப்பு என முப்பெரும் விழா திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

அனைவரையும் திருப்பத்தூர் நகர தலைவர் பரத் வரவேற்றார். இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேசுகையில்..

மகாத்மா காந்தி தலைமையில் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்து இருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் ஒரு கூண்டு ஊசி கூட தயாரிக்க முடியாத நிலை இருந்தது ஆனால் தற்போது நாம் உலக அளவில் முன்னேறிய நாடாக இருக்க காங்கிரஸ் கட்சி அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது. 2014 வரை இந்திய எப்படி இருந்தது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இந்திய 10 வருடங்கள் பின்னோக்கி சென்று உள்ளது.

இதுவரை 15 லட்சம் கோடி ரூபாயை 10 தனியார் முதலாளிகளுக்கு நிவாரணம் கொடுத்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், மேலும் கடனை தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயிகளுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்த அரசாங்கம் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி என பேசினார். இதில் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் ஏலகிரி செல்வம், குமரேசன், கணேஷ்மல், முருகன், வெங்கடேசன், ஜானி ஜாவித் மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *