தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2203 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சின்னக்கடை தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளி கிழமை இன்று காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு 2203 பயனாளிகளுக்கு 1 கோடியே 26 லட்சத்து 73 ஆயிரத்து 508 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், மண்டல தாசில்தார் முரளி கிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பயனாளிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..