சீர்காழி நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி கூட்டத்தை புறக்கணித்த 3,திமுக கவுன்சிலர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகராட்சியின் சாதாரண கூட்டம் திமுக நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் சுப்பராயன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தின் தொடக்கமாக நகர்மன்ற தலைவர் நகரமன்ற கூட்ட அரங்கின் கண்ணியத்தையும், மாண்பை காக்கும் வகையில் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நகர்மன்ற தலைவர் அனுமதி பெற்று கூட்ட அரங்கிற்குவர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவமதிக்கும் விதமாக இவ்வாறு பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் தனது பேச்சினை திருத்தம் செய்து தலைவர் துர்கா ராஜசேகர் தெளிவு படுத்தினார் பின்னர் சமாதானம் செய்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வள்ளி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய மூவரும் தங்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு வந்தனர். உறுப்பினராக வெற்றி பெற்றது முதல் இதுவரை தாங்கள் வைத்த எந்த வித மக்கள் பிரச்சனைக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை.

தங்கள் வார்டு பகுதிக்கு எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்றனர் .கூட்டத்தில் பங்கேற்று சிறிது நேரத்தில் ரம்யா வள்ளி ரேணுகாதேவி மூவரும் கூட்ட அரங்கிலிருந்து பாதியில் வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் நடந்து முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *