வணக்கம். நாடாளுமன்றத் தேர்தல் 2024–இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் என்.ஆர். காங்கிரசின் துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிங்களின் உரிமைகளை மீட்டெடுக்க மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் குரலாக பிப்ரவரி 18–ஆம் தேதியன்று புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டத்தை கூட்ட அறிவுறுத்தி உள்ளார்கள். புதுச்சேரி மாநில கழகமும், காலாப்பட்டு தொகுதி கழகமும் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தில் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட நம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.
ஆகவே, இக்கூட்டத்தில் மாநில கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், அணித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: பாரதி நகர், கருவடிக்குப்பம்
நேரம்: மாலை 6.00 மணியளவில்
என்றும் கழகப் பணியில்,
இரா. சிவா, எம்.எல்.ஏ.,
மாநில கழக அமைப்பாளர்,
புதுச்சேரி மாநில தி.மு.கழகம்