அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில்கள்ளந்திரி, பூவை குடி கிராமம், திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கள்ளழகர் திருமண மண்டபம் கட்டும் பணி ரூபாய் 9.25 கோடி, மற்றும் திருக்கோயில் வளாகத்தில் மேற்கு புற கோட்டை மதில் சுவர் புனரமைக்கும் பணிக்காக ரூபாய் 2.95 கோடியும், ஆக மொத்தம் 12. 20 கோடி ரூபாயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மண்டல இணை ஆணையர் க. செல்லத்துரை, திருக்கோயில் துணை ஆணையர் /செயல் அலுவலர் லெ. கலைவாணன், திருக்கோயில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், மீனாட்சி, செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி,மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர் சுப்புலட்சுமி, மாவட்ட சேர்மன் சூரியகலா, வல்லாளப்பட்டி பேரூராட்சி தலைவர் குமரன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், வளையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, முக்கிய பிரமுகர்கள், மதுரை மண்டல செயற்பொறியாளர்( மின்), திருக்கோவிலின் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் அனைத்து பொது மக்களுக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *