திருவாரூரில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் நகருக்கு உட்பட்ட மயிலாடுதுறை சாலை புதுத் தெருவில் அமைந்துள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பிப்ரவரி 17ஆம் தேதி அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

அதனடிப்படையில் இந்த வருடம் நமது மாவட்டத்தில நடைபெறும் மூன்றாவது வேலை வாய்ப்பு முகாமாகும் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இளைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது

குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் கல்வித்துறைக்கு ஏற்றவாறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகிறது இதனால் மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது


முகாமில் தொழில்துறை சேவைத்துறை விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றி ஐம்பது தனியார்துறை நிறுவனங்கள் சுமார் ஐந்தாயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்

மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் மேலும் உயர்கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிகடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது

தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து பயன்பெற்று வருகின்றனர் வாய்ப்பினை இளைஞர்கள் சரிவர பயன்படுத்தி கொள்ளவேண்டு மென மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டார்

நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வடிவேல் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பரியா செந்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகர் வட்டாட்சியர் செந்தில்குமரன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *