பட்ஜெட் சட்டசபை தொடரில் – பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுதல் – தொடர்பாக:

S.செந்தில்குமார் மாநில தலைவர் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக கணினி ஓவியம் உடற்கல்வி தையல் இசை உள்ளிட்ட பாடங்களில் 12 ஆயிரம் பேர் 13 கல்வியாண்டாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

தற்போது, திமுக ஆட்சியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூபாய் 12500 சம்பளமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இன்றைய விலைவாசி உயர்வில் இது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போதாது.

காலமுறை ஊதியம் வழங்கினால் அவர்களின் குடும்பங்கள் முன்னேறும்.

10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை விரைந்து செயல்படுத்தினால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அதுபோல் இந்த ஆண்டு மே மாதம் சம்பளம் வழங்கி அவர்கள் குடும்ப சுமையை தீர்க்க வேண்டும்.

மேலும் மற்ற ஆசிரியர்களைப் போல, இவர்களுக்கும் அனைத்து நாட்களும் முழுநேரம் வேலை வழங்கி, பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181 ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணையிட வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *