வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற மார்ச் 17-ம் தேதி பங்குனிபெருந்திருவிழா நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், வருடம் தோறும் பங்குனி மாதத்தில் பெருந்திரு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 21-ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு,காலையில் அம்மன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ஹோமங்களும் நடைபெற்று,பகல் 12- மணிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து அன்னதானமும், மாலை ஆறு மணி அளவில் அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது.

வருகின்ற மார்ச் மாதம் ஒன்னாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் அம்மன் திருவுருவப்படம் வீதி உலா காட்சியும், இரவு ஆலயத்தில் பூச்சொரிதல் விழாவும், மார்ச் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு இரண்டாம் காப்பு கட்டுதலும், அன்று முதல் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், மார்ச் 17 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெருந்திருவிழாவும், மார்ச் 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா காட்சியும் நடைபெறும் என ஆலய தக்கார் அ. ரமேஷ், ஆய்வர் க. மும்மூர்த்தி மற்றும் செட்டித் தெரு நிர்வாகிகள், செட்டித்தெரு வாசிகள் மற்றும் ஸ்ரீ சீதாள தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படி தாரர்கள்,நகரவாசிகள் ஆகியோர் சேர்ந்து முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *